Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடம் நடத்த 14 சேனல்கள் ரெடி! விரைவில் அறிவிப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (11:13 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்த 14 சேனல்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட பாடங்களை தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தங்களது மாணவர்களுக்கு நடத்த தொடங்கியுள்ளன. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஆன்லைன் மூலமாக படிக்க அனைத்து மாணவர்களுக்கும் வசதி இருக்காது என்பதால் தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் குறையும் பட்சத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியும் உள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “பள்ளிகள் திறப்பது தற்போதைக்கு சாத்தியமில்லாதது. மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 14 சேனல்கல் பாடங்களை ஒளிபரப்ப முன் வந்துள்ளனர். இன்னும் 3 தினங்களில் பாடம் நடத்தும் பணி முழுமையாக தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments