Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாறி வருகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (14:50 IST)
தமிழக ஆளுனர் ரவி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்றும், அறியாமை காழ்ப்புணர்ச்சியால் சனாதன தர்மத்தை சில தவறாக நினைத்துள்ளனர் என்றும் பாரத தேசத்தில் யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தையும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது என்றும் தெரிவித்தார். 
 
கவர்னரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டரில் கூறியதாவது:
 
சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்.
 
தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. 
 
ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments