ஸ்டாலினை நம்பாதீங்க.. கடனை கட்டுற வழிய பாருங்க – அமைச்சர் செல்லூர் ராஜு

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (17:22 IST)
கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடனை எப்படி ஸ்டாலின் தள்ளுபடி செய்வேன் என கூறினார்? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் மதுரவாயல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு வங்கியை திறந்து வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் ”திமுகவை விட தரமான பொருட்களையும், சலுகைகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என ஸ்டாலின் பேசினார். எதன் அடிப்படையில் அவர் இப்படி பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் இது மக்களை ஏமாற்றும் செயல். அவரது பேச்சை நம்பி யாராவது கடனை செலுத்தாமல் இருந்தால் முறைப்படி அவரவர் கடன் தொகையை செலுத்திவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments