Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை! – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (13:42 IST)
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தபோது அறிவித்த வாக்குறுதிகளில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் ஒன்று. அதன்பேரில் தமிழகம் முழுவதும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அமைச்சர் சேகர் பாபு “தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை நடைபெறும்” என கூறியுள்ளார். மேலும் ”அன்னை தமிழில் அர்ச்சனை” என்று பெயர் பலகை வைக்கப்பட்டு அர்ச்சகரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடவும் திட்டமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. நாடாளுமன்றத்தில் பெரும் அமளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments