Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரியை மாற்றி கூறிய அமைச்சர், தூங்கிய அதிகாரி: சென்னை விழாவில் பரபரப்பு

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (21:24 IST)
அதிகாரியை மாற்றி கூறிய அமைச்சர், தூங்கிய அதிகாரி
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் என அமைச்சர் மாற்றி கூறியதும் அந்த விழாவில் அதிகாரி ஒருவர் தூங்கி விழுந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முதிர்வு தொகையை சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா வழங்கினார். சாலிகிராமத்தில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகையை வழங்கினார்
 
இந்த விழாவில் அவர் பேசியபோது சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியை சேலம் மாவட்ட ஆட்சியர் என மாற்றி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விழாவில் கலந்து கொண்ட சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஒருவர் தூங்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தூங்கியதை பார்த்து அருகில் உள்ள அதிகாரி ஒருவர் அவரை தட்டி எழுப்பியது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அரசு விழா ஒன்றில் கலெக்டர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் குறித்தும், தூங்கிய அதிகாரிகள் குறித்தும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments