Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அது போன மாசம், இது இந்த மாசம்”…வேலூர் தொகுதி குறித்து ராஜேந்திர பாலாஜி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (11:50 IST)
வேலூர் தொகுதி சென்ற மாதம் தான் திமுகவின் கோட்டையாக இருந்தது எனவும், தற்போது இல்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விழா முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வேலூரில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை குறித்து கேள்வி எழுப்பியபோது, வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று பலர் கூறிவருகிறார்கள், ஆனால் அது போன மாதம் தான். இப்போது வேலூர் தொகுதி அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதுவும் உறுதியான எக்கு கோட்டையாக உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் வேலூர் தேர்தலில் அதிமுக–விற்கான வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது எனவும், இனிமேல் திமுக எந்த தேர்தலிலும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கு வேலூர் தேர்தலில் அதிமுக-வின்  வெற்றி அமையவுள்ளது எனவும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments