Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை ஆளுநரா...? ஆர்.என்.ரவி ஆளுநரா..? அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (08:03 IST)
தமிழகத்தில் ரவி ஆளுநரா அல்லது அண்ணாமலை ஆளுநரா என்று சந்தேகமாக இருக்கிறது என அமைச்சர் ரகுபதி ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். 
 
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் 
 
இந்த மசோதாவில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு விளக்கம் கேட்டு அவர் திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சட்ட அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர் கேட்ட விளக்கம் அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனாலும் அவர் திருப்பி அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் ஆளுநர் என்னென்ன விளக்கம் கேட்டார் என்பதை எல்லாம் அண்ணாமலை கூறியதை பார்க்கும்போது இந்த மசோதா குறித்து இருவரும் விவாதம் செய்தார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆர்என் ரவி ஆளுநரா அல்லது அண்ணாமலை ஆளுநரா  என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் தடை செய்தால் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments