Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஓசி” என பேசியது தவறுதான்..? வருந்திய பொன்முடி! – முதல்வர் பேசியது காரணமா?

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (09:12 IST)
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பெண்களுக்கான இலவச பேருந்து சேவை குறித்து பேசிய விதம் சர்ச்சையான நிலையில் அதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திமுக அமைச்சர்கள் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இது மக்களிடையேயும் சில அதிருப்திகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த திமுக விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவங்கள் குறித்து தனது வேதனையை பகிர்ந்திருந்தார்.

ALSO READ: இன்று பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம்! – என்ன படம் தெரியுமா?

இந்நிலையில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி “இப்போதெல்லாம் ‘வாயா போயா’ என பேசவே பயமாக இருக்கிறது. பாஜக டார்கெட் செய்து அரசியல் செய்கிறார்கள். ஒரு வார்த்தையை பிடித்துக் கொள்கிறார்கள். முதல்வர் இதுபோன்று பேச வேண்டாம் என என்னை அறிவுறுத்தினார். உண்மையில் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் உண்மையாகவே வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments