Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75% மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும்! – தனியார் கல்லூரிகளுக்கு வார்னிங்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (16:36 IST)
கொரோனா காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாகவே கல்லூரிகள் நடைபெறாத சூழல் உள்ளது. இடையே சில வாரங்கள் கல்லூரிகள் திறக்கப்பட்டபோதும் இரண்டாம் அலை பரவலால் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தனியார் கல்லூரிகள் முழு கட்டணம் மாணவர்களிடம் வசூலிக்க கூடாது என்றும், 75 % கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பொன்முடி தனியார் கல்லூரிகள் 75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், முழு கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments