Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயலி மூலம் ஆவின் பொருட்கள் விற்பனை: அமைச்சர் தகவல்..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (17:54 IST)
புதிய செயலி மூலம் பால் உள்பட ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் அனைத்து பொருள்களும் செயலி மூலம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. வீட்டில் உட்கார்ந்து கொண்டே அனைத்து வகையான பொருட்களையும் வாங்கும் வசதி தற்போது கிடைத்துள்ள நிலையில் ஆவின் பொருள்களையும் அதுபோல் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு ஆவின் பொருள்களை விற்பனை செய்வதற்காக புதிய செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் இணையவழியில் பால் உள்பட ஆவின் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 
 
முதல் கட்டமாக இந்த வசதி சென்னை மற்றும் இதர மாநகரங்களில் விற்பனை தொடங்கப்படும் என்றும் அதன் பிறகு படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் செயலி மூலம் ஆவின் பொருட்கள் விற்பனை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments