Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (13:55 IST)
ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 
 
பால்வளத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆவினில் இனி உறுதியான மாற்றத்தை பார்ப்பீர்கள் என்று கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சம் லிட்டராக உயர்த்த இந்த ஆண்டுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தற்போது தனியார் நிறுவனங்கள் தண்ணீர் பாட்டிலை விற்பனை செய்து வரும் நிலையில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்தால் குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments