Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியா வந்து எலி மருந்து கேட்டா தராதீங்க..! – மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தல்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:36 IST)
தனிநபர் வந்து கேட்டால் எலி மருந்து போன்ற உயிர் கொல்லும் பொருட்களை தர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பல காலமாக மருந்து கடைகளில் விற்கும் எலி மருந்து உள்ளிட்ட ஆட்கொல்லி பொருட்களை தற்கொலைக்கு முயலும் பலர் வாங்கி சாப்பிட்டு இறப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் எலி மருந்து விற்க, வாங்க கட்டுப்பாடுகள் தேவை என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக மக்களிடையே உள்ளது,

இந்நிலையில் இதுகுறித்து இன்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதில் உயிரை மாய்த்துக் கொள்ள ஆதாரமான பொருட்களை மருந்து கடைகளில் வெளியில் தெரியும்படி வைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

அதேபோல மருந்து கடையில் தனி நபராக யாராவது வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் போன்றவற்றை கேட்டால் தரக்கூடாது என்றும், முக்கியமாக சிறுவர்களுக்கு இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments