Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத்தை போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: வைரஸ் காய்ச்சல் குறித்து அமைச்சர்..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (11:17 IST)
கொரோனா காலத்தில் இருந்ததைப் போல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தற்போது மிக வேகமாக பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். 
 
கொரோனா வைரஸ் காய்ச்சலை கண்டு பெரிய அளவில் பதட்டம் அடைய தேவை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கொரோனா காலத்தைப் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
3 அல்லது 4 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டால் இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்றும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் பிறரும் பாதிக்கப்படலாம் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவிப்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments