Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளை உடனே திறங்க.. – புயல் மாவட்டங்களுக்கு அமைச்சர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (08:28 IST)
தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ரேஷன் கடைகளை உடனடியாக திறக்க அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவார் புயலாக மாறி கரையை கடக்க உள்ளது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்தியுள்ள நிலையில் முன்கூட்டியே உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் பொருட்டு ரேஷன் கடைகளை வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே திறக்கவும், மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments