Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி நீர் பங்கீடு விவகாரம்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் துரைமுருகன்..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (08:43 IST)
மத்திய நீர்வளத் துறை அமைச்சர்  கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை இன்று அமைச்சர் துரைமுருகன் சந்திக்கிறார். இன்றைய சந்திப்பின்போது அவர் காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தபோது காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார். இந்த நிலையில் இன்று மீண்டும் அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத் துறை அமைச்சர்  கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்றைய சந்திப்பின்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments