Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்; முதல்வர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (08:47 IST)
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பால் காலமான நிலையில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் அமைச்சர் துரைக்கண்ணு காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்த செய்தி அதிமுகவினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உருவப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவரது உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments