Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆரை வெளியில் யாருக்கும் தெரியாதாம்: சிறுபிள்ளைத்தனமாக பேசிய அமைச்சர் சீனிவாசன்!

எம்ஜிஆரை வெளியில் யாருக்கும் தெரியாதாம்: சிறுபிள்ளைத்தனமாக பேசிய அமைச்சர் சீனிவாசன்!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (15:56 IST)
அஇஅதிமுக எனப்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய நிறுவனர் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர். தான் ஆரம்பித்த கட்சி மாநில அளவில் முடங்கிவிடக்கூடாது அது ஒரு தேசிய கட்சியாக விளங்க வேண்டும் என தனது கட்சிக்கு அஇஅதிமுக என பெயர் வைத்தார் அவர்.


 
 
ஆனால் அவரது கட்சியில் உள்ள மூத்த அரசியல்வாதியும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்ஜிஆரை வெளிமாநில முதல்வர்கள் யாருக்கும் தெரியாது என கூறியது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுத்த ஜனவரி வரை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இதன் முதல் விழா மதுரையில் ஜூன் 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. சட்டப்பேரவை நடந்து வருவதால் இரவோடு இரவாக அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிரூபர் ஒருவர் இந்த விழாவுக்கு வெளிமாநில முதல்வர்களை அழைப்பீர்களா என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் தம்பி அவுங்கள்ள யாருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியும் என்றார்.
 
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பதிலை அருகில் நின்ற அமைச்சர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செங்கோட்டையன் சுதாரித்துக்கொண்டு சென்னையில் நடைபெறும் விழாவில் அவர்களை அழைப்போம் என்றார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments