Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அரசுக்கு, முதலாளிகள் மட்டுமே சிறந்த நண்பர்கள்: ராகுல் காந்தி கிண்டல்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:04 IST)
பிரதமர் மோடியின் அரசுக்கு முதலாளிகள் மட்டுமே சிறந்த நண்பர்கள் என்றும் மற்றவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என்றும் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 20 நாட்களாக விவசாயிகள் தங்களுடைய உரிமைக்காக போராட்டம் நடத்தி வருவதை மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடி அரசு கருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள் என்றும், நாட்டைப்பற்றி எண்ணூம் குடிமக்கள் நகர்ப்புற நக்சல்கள் என்றும், புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனாவை பரப்புபவர்கள் என்றும், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானி என்றும் தெரிகிறது
 
இவ்வாறு பிரதமர்மீது குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ‘மோடிக்கு முதலாளிகள் மட்டுமே சிறந்த நண்பர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்து நேரடியாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து உள்ள காங்கிரஸ் ராகுல் காந்தி அவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜக என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments