Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல்; பக்தர்கள் பதற்றம்

Arun Prasath
வியாழன், 28 நவம்பர் 2019 (13:19 IST)
மீனாட்சியம்மன் கோவிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தற்போது பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

வரலாற்று பிரசித்திபெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று மர்ம நபர்களால் மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோவிலின் உள்பகுதிகளிலும், நுழைவு வாயில்களிலும், வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 360 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments