Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ மீது திமுக தொடர்ந்த தேச துரோக வழக்கு - விடுவித்தது நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (17:07 IST)
திமுக அரசு தொடர்ந்த தேசத் துரோக வழக்கிலிருந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
 

 
கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.
 
அதில், இந்திய இறையாண்மைக்கு எதிரான அம்சங்கள் இடம்பெற்றதாக அவர் மீது, அப்போதைய திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
அரசுத் தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் அரசுத் தரப்பு சாட்சிகள் கூறிய விஷயங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு அவர் பதில் அளித்தார்.
 
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வியாழனன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கியூ பிரிவு போலீசார் ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்பதால் வைகோவை விடுதலை செய்வதாக சென்னை 3-ஆவது கூடுதல் அமர்வு தீர்ப்பளித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments