Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தை ஆரம்பித்த வைகோ; புதிய கூட்டணி குறித்து விரைவில் முடிவு

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (17:51 IST)
தஞ்சையில் நடைபெறும் மாநாட்டில் எதிர்கால அரசியல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என வைகோ கூறியுள்ளார்.


 

 
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மதிமுக சார்பில் தஞ்சையில் வருகிற 16ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
 
1995-ல் நடைபெற்ற முதல் மதிமுக மாநாடு மிகப்பெரிய மாநாடு. அதை மிஞ்சும் அளவிற்கு தஞ்சை மாநாடு அமையும். இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படும். எதிர்கால அரசியல் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும். 
 
மதச்சார்பின்மையும், கூட்டாச்சி தத்துவமும் காக்கப் பட வேண்டுமென்றால் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு நான் பக்க பலமாக இருப்பேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments