Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் சேர்ப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (09:01 IST)
தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஊரடங்கு உத்தரவுக்கு பின் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்யவும் மாவட்டங்களுக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு இணையதள முகவரியையும் அறிவித்து இருந்தது. இந்த இணையதள முகவரியில் பதிவு செய்துவிட்டு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாவட்டத்திற்கு உள்ளேயேயும் பயணம் செய்யலாம். 
 
ஆனால், மக்கள் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் திருமணம் என்ற காரணத்தை இ-பதிவில் இருந்து அரசு நீக்கியிருந்தது. இந்நிலையில், பொதுமக்களிடம் அதிக அளவு கோரிக்கை வந்ததை அடுத்து மீண்டும் திருமண அனுமதி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்