Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரீனாவில் வடிவேல் காமெடியாக மாறிய போலீசாரின் முயற்சி

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (22:07 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று சென்னை மெரீனாவில் மக்களோடு மக்களாக ஊடுருவிய போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

மெரீனாவில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் போராட்டக்காரர்கள் ஊடுருவியதால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக போராட்டம் நடக்கும் இடத்திற்கு செல்வதற்காக பீச்சில் சுற்றி வரும் குதிரையை பயன்படுத்தினர்

ஆனால் பீச்சை சுற்றி சுற்றியே வரும்படி பழக்கப்படுத்தப்பட்ட குதிரை போலீஸார் ஏறியதும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வந்தது. 'குசேலன்' படத்தில் ரஜினியை பார்க்க செல்லும் வடிவேலு, கிளம்பிய இடத்திற்கே வந்தது போன்ற காமெடியாக மாறியது போலீசாரின் இந்த முயற்சி

தொடர்புடைய செய்திகள்

பல்லாங்குழி சாலைகளால் பதறும் வாகன ஓட்டிகள்

யூட்யூபர் இர்ஃபான், உதயநிதியோட ப்ரெண்டு.. அதுனால கேஸ் இல்ல! என் மேல 5 கேஸ் இருக்கு! – அதிமுக ஜெயக்குமார் ஆவேசம்!

ஈஷா நவீன எரிவாயு மயான கட்டுமான செயல்பாடுகளை விரைவுபடுத்த கிராம மக்கள் மனு!

போதைப்பொருள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறிSDPI கட்சியினர்சாலை மறியல் போராட்டம்!

தனிச்சு நின்னு ஜெயிச்சு காட்டு.. கட்சிய கலைச்சிட்டு போயிடுறேன்! – அண்ணாமலைக்கு சீமான் சவால்!

அடுத்த கட்டுரையில்
Show comments