Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? சென்னை ஐகோர்ட் அதிரடி கேள்வி

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (19:10 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று விவசாயி சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
 
இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறினார்.
 
ஆனால் இதனை நிராகரித்த  நீதிபதி டி.ராஜா, 'காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? என்ற கேள்வியை தமிழக அரசு முன் வைத்தார். மேலும் போராட்டங்களை ஒழுங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறிய நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments