Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாடு ருசியாக இல்லை… 77 வயது கணவன் மனைவிக்கு செய்த கொடுமை!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (15:47 IST)
கடலூர் மாவட்டத்தில் உணவு ருசியாக சமைத்துத் தரவில்லை என முதியவர் ஒருவர் தனது மனைவியைத் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் தங்கவேல்(வயது 77) மற்றும் கலியம்மாள் (60). இந்நிலையில் கலியம்மாள் சமைக்கும் உணவு எப்போதும் ருசியாக இல்லை என்று கூறி தங்கவேல் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல சாப்பாடு நன்றாக இல்லை என சொல்லி திட்டியுள்ளார்.

பின்னர் மனைவியைக் குடிக்க தண்ணீர் எடுத்து வர சொல்லி கேட்டுள்ளார். ஆனால் அவர் தாமதமாக எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடும் கோபமடைந்த தங்கவேல், தனது மனைவி என்றும் பராமல் அவரை அடித்து தள்ளிவிட்டுள்ளார். இதில் தலை சுவரில் மோதி கலியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தங்கவேலைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments