Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் – டிராக்டர் ஏற்றிக் கொலை !

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (11:45 IST)
கரூர் மாவட்டத்தில் காதலுக்கு இடைஞ்சலாக இருந்த பெண்ணின் கணவனை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த அருகேயுள்ள பரமத்தி எனும் ஊரில் மனோகரன் மற்றும் சித்ரா தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிகளுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சித்ராவுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
 
இந்நிலையில் இந்த காதல் விவகாரம் சித்ராவின் கணவர் மனோகருக்கு தெரியவர தன் மனைவியைக் கண்டித்துள்ளார். இதையறிந்த சுதாகர் கோபத்தில் டிராக்டரை எடுத்துச் சென்று டூவீலரில் வந்துகொண்டிருந்த மனோகரன் மீது மோதியுள்ளார். பலத்த காயமடைந்த மனோகரன்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
 
இதையடுத்து தலைமறைவான சுதாகரையும் சித்ராவையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments