Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கர தீ விபத்து!

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (17:27 IST)
கும்மிடிப்பூண்டி அருகே பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் இன்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 
 
பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் எண்ணெய் கேன்கள், பெயின்ட் தயாரிக்க பயன்படுத்தும் ரசாயனங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் தீ அடங்காமல் கொழுந்து விட்டு எரிகிறது. 
 
சிப்காட் பகுதியில் இருந்து முதலில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணி நடைபெற்றது. தீ கட்டுக்குள் அடங்காமல் எரிந்து வருவதால் மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தீயணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments