Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாமக திருவிழா: கும்பகோணத்திற்கு 15 நிமிடத்துக்கு ஒரு ரயில்

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (02:13 IST)
மகாமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணத்திற்கு 15 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
]\
 
இது குறித்து, கும்பகோணத்தில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி முதல் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதியான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி போன்றவைகள் செய்யப்படும்.
 
அதிக வெயில் மற்றும் மழை ஏற்பட்டால், அதிலிருந்து பயணிகளை காக்கும் வகையில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் பயணிகள் அமரும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து பணிகளும் செய்யப்படும்.
 
திருவிழா முன்னிட்டு, கும்பகோணத்திற்கு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும் என்றார். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Show comments