Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.80 கோடியில் போட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்: மதுரை மக்கள் அதிருப்தி..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (20:23 IST)
ரூ.80 கோடியில் போட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்: மதுரை மக்கள் அதிருப்தி..!
ரூ.80 கோடி செலவில் போடப்பட்ட தார் சாலை ஒரே ஆண்டில் பாழாகி போனதை எடுத்து மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் முதல் சர்வேயர் காலனி வரை ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை துறை கடந்த ஆண்டு தார் சாலை ஒன்றை போட்டது. இந்த சாலை ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் மதுரை பைபாஸ் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி தோண்டிய குழிகளை மூடாமல் போட்டுச் சென்றதால் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு போடப்பட்ட இந்த சாலை தற்போது குண்டும்குழியுமாக உள்ளது. 
 
சாலை பிரமாண்டமாக இருந்தாலும் சாலையின் சில பகுதிகளில் குழாய் பதிக்க தோண்டியதன் காரணமாக தற்போது சாலை பாழாகி விட்டதாகவும் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
80 கோடி ரூபாய் செலவு செய்து போடப்பட்ட தார் சாலை ஒரே ஆண்டில் பாழானதை அடுத்து மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments