Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடத்திற்கேற்ப குடிதண்ணீர் விலை அதிகரிப்பு! – மதுரையில் போஸ்டரால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (11:08 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் குடிதண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிலத்தடி நீரும் அதிகளவில் கிடைக்காத நிலையில் வெயில் காலமும் நெருங்கி விட்டதால் மதுரையின் பெரும்பாலான பகுதிகள் தனியார் குடிநீர் வாகனங்களின் தண்ணீர் சப்ளையை நம்பியே உள்ளன.

இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மதுரை தனியார் குடிநீர் சப்ளை வாகனங்கள் குடிநீர் விலையை குடத்தின் அளவுக்கு ஏற்ப உயர்த்தியுள்ளன. அதன்படி பெரிய குடத்தில் தண்ணீர் ரூ.13, சிறிய குடம் ரூ.8 மற்றும் கைக்குடம் ரூ.4 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் குடிதண்ணீர் விலையேற்றம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments