Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்; சிறுவன் பலியால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:15 IST)
கொரோனாவை தொடர்ந்து மதுரையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிரிந்தே நாடு இன்னும் மீளாத சூழலில் பறவைக்காய்ச்சல் போன்ற புதிய வியாதிகளும் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து இறந்த சிறுவனின் சகோதரனுக்கும் டெங்கு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மதுரையில் டெங்கு பரவாமல் இருக்க கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments