Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி! பயணிகள் மகிழ்ச்சி..!

Mahendran
புதன், 11 செப்டம்பர் 2024 (13:48 IST)
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நேரடியாக விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் மதுரையில் காலை 6 55 மணிக்கு முதல் விமானமும், இரவு 9:25 கடைசி விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுவதில்லை .
 
இந்த நிலையில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்க வேண்டும் என்று மதுரை நகர மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் மதுரை வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் இது குறித்து பரிசீலனை செய்தார். இதனை அடுத்து 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
 
இதனை அடுத்து இரவு நேரத்தில் இண்டிகோ, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆகாச உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மதுரையிலிருந்து விமானங்களை பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான கால அட்டவணை பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments