ஆவின் பணி நியமன முறைகேடு அம்பலம்?; 170 பேர் பணி நீக்கம்! – அதிரடி உத்தரவு!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (08:41 IST)
மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக நேரடி பணி நியமனம் மூலம் சேர்ந்த பலர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை மாநிலம் முழுவதும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் பணியில் சேர முறையான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2020-2021ம் ஆண்டில் மதுரை ஆவினில் முறையான தேர்வு முறைகளை பின்பற்றாமலும், பணியிடங்கள் காலியாக இல்லாத நிலையிலும் கூடுதல் பணியாளர்களை நேரடியாக நியமித்தது குறித்து சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் முறைகேடாக நேரடி நியமனங்கள் நடைபெற்றது அம்பலமாகியுள்ள நிலையில் நேரடி நியமனங்கள் மூலம் பணி பெற்ற 170 பேரை பணிநீக்கம் செய்து ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments