Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் வேகமாக பரவி வரும் "மெட்ராஸ் ஐ"!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (11:54 IST)
மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு நெல்லையில் 800 தாண்டியுள்ளது. 
 
மழைக் காலங்களில் அதிகம் பரவும் நோய்களில் ஒன்றான மெட்ராஸ் ஐ தோற்று நோயாக பார்க்கப்படுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து பிறருக்கும் பரவும். 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் மெட்ராஸ்-ஐ நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இது படி படியாக பரவி நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது நெல்லையில் கடந்த இரண்டு நாட்களில் 800 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments