Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது: மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது: மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (13:36 IST)
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிரான அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்வர் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்க ஆரம்பித்ததும் சசிகலா அதிருப்தியாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓபிஎஸ் பக்கம் அணிதிரள்கின்றனர்.


 
 
நேற்று அதிரடி திருப்பமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் சேர்ந்தார். ரவுடிகள் கும்பலில் இருந்து அதிமுகவை மீட்கவே பன்னீருடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் மேலும் அதிரடியாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்க அங்கீகாரம் அளிக்க கூடாது என கூறியுள்ளார். அவைத்தலைவரின் கடிதம் என்பதால் இது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே சசிகலாவை அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக நியமித்ததில் சட்ட சிக்கல் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில் அவைத்தலைவரின் இந்த கடிதம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments