Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி கூறினார் மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (19:56 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.


 
 
முதல்வராக நேற்றைய தினம் ஜெயலலிதா பதவியேற்றதையடுத்து, நாளை முதல் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து தனது முகநூலில் அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தன்னை தேர்ந்தெடுத்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
சட்டமன்ற தலைவர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றுவேன். சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற தொடர்ந்து பாடுபடுவேன். மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments