Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து-மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய ஜி.கே.வாசன் கோரிக்கை

Webdunia
புதன், 30 டிசம்பர் 2015 (04:03 IST)
சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து நடவடிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் சுமார் 16.35 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், சுமார் 58 லட்சம் பேர் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை பெறுவதை சமீப காலமாக நிறுத்திக் கொண்டனர். இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.
 
இந்த நிலையில், ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு, ஜனவரி முதல் தேதியில் இருந்து மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் பெற முடியாது என மத்திய அரசு  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments