குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

Prasanth Karthick
வியாழன், 28 நவம்பர் 2024 (09:15 IST)

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு குறைந்துள்ள நிலையில் புயல் உருவாவதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

 

வங்க கடலில் தமிழக நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக நேற்றை வலுவடையும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வது நின்ற நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மெல்ல நகரத் தொடங்கியுள்ளது. இதனால் அது புயலாக மாறும் நேரமும் தாமதமாகியுள்ளது.

 

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு - தென்கிழக்கு திசையில் 480 கி.மீ தொலைவில் மெல்ல நகரத் தொடங்கியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இன்று மாலை அல்லது நாளை அதிகாலைக்குள் இது ஃபெங்கல் புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் 30ம் தேதியில் இந்த புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கலாம் என கணிக்கப்படுகிறது.

 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று வரை டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று அப்பகுதிகளில் மழை குறைந்துள்ளது. அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், காரைக்கால் பகுதிகளில் மழை தொடர்ந்து வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments