Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2014 (15:47 IST)
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து, குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் ஆகியவற்றில் சராசரி மழை அளவை விட அதிகமாக பெய்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையும் என்றும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக (புயலாக) 6 அல்லது 7ஆம் தேதி மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments