Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:08 IST)
இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்து தாழ்வு தற்போது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் இந்திய பெருங்கடலின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது என்பதும் இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலைக்கு 455 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மற்றும் சென்னை எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments