Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரம்: அமைச்சர் ரமணா மீது கொலை மிரட்டல் புகார்

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2015 (01:51 IST)
தனது காதலை பிரிக்க தமிழக அமைச்சர் முயற்சி செய்வதாக இளைஞர் ஒருவர் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளார்.
 

 
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி டி.வி.புரத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த பரத், மீஞ்சூர் ஜானகிராமபுரம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகள் மஞ்சுபிரியாவை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு மஞ்சுப்பிரியா வீட்டில் கடும் எதிர்ப்பு கிலம்பிள்ளது. பின்பு, திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.
 
தமிழக அமைச்சர் ரமணா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், தனி செக்யூரிட்டி கூடுதல் எஸ்.பி.பெருமாள் தூண்டுதலில் பேரில் திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் உதய பானு என்னை மிரட்டுகிறார்.
 
தமிழக அமைச்சர் பி.வி.ரமணா சாதி அடிப்படையில் எனது காதலை தடுத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளார்.
 
இந்த சம்பவத்திற்கும் தனக்கும் துளியும் தொடர்பு இல்லை என அமைச்சர் ரமணா மறுத்துள்ளார்.  

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

Show comments