Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்டைய இடிச்சுட்டு போவீங்களோ... பெருமாள் சிலையால் திரும்பவும் சிக்கல்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (19:34 IST)
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலை ஒரே கல்லிக் செதுக்கப்பட்டது இதன் சிறப்பு. ஆனால் இந்த சிலையால் ஒரே சிக்கல்தான். 
 
பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலையை கொண்டுபோக துவங்கியதில் இருந்தே சிக்கல்தான். 
 
முதலில் 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் 6 டயர்கள் வெயிட் தாங்காமல் வெடித்தது. பின்னர் திண்டிவனம் பகுதியில் சென்ற போது இருபுறங்களிலும் இருந்த கடைகளை, வீடுகளை இடித்தது. இதனால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 
 
இப்போது செஞ்சி நகருக்குள் நுழைந்து திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக சிலையை கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், செஞ்சி கோட்டை சுற்று சுவருக்கு இடையே செல்லும் சாலை குறுகியதாக இருப்பதால் செஞ்சிக்கோட்டை சுற்று சுவரை இடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
ஆனால், தொல்லியல் துறையினர் இதற்கு அனுமதிக்கு மறுத்துவிட்டனர். இதனால், சிலையை எடுத்து செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பெங்களூர் போவதற்குள் இன்னும் என்னென்ன சிக்கல் வருமோ...?

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments