Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

Siva
வியாழன், 23 மே 2024 (08:12 IST)
கோயிலுக்கு வந்த பக்தையிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயிலுக்கு வந்த பக்தையிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது வழக்குப்பதிவு செய்யபட்ட நிலையில் அர்ச்சகர் கார்த்திக் தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்ய தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக காளிகாம்பாள் கோவில் அர்ச்சகராக இருந்த கார்த்திக் என்பவர் இளம்பெண் ஒருவருக்கு  தீர்த்தம் என எதையோ குடிக்க வைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்த நிலையில் அப்பெண்ணை அர்ச்சகர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்