Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனவளர்ச்சி பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு இதுதான் தண்டனை

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (23:58 IST)
மனவளர்ச்சி பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு கடலுார் மகிளா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 

 
கடலுார் பீமாராவ் நகர், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் ராமன், [வயது 40]. கடந்தாண்டு ஜூன் 24ஆம் தேதி, தனது வீடு கட்டுமானப்பணியின்போது அந்த பகுதியில் உள்ள மனநிலை பாதித்த பெண்ணை பார்த்துள்ளார்.
 
அப்போது அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனிமையில் இருந்த, 16 வயதுள்ள மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இது தொடர்பாக கடலூர் பழைய டவுன் காவல்நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கை நடத்தி வந்தனர்.
 
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்