Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைக்கட்டும் பக்ரீத் பண்டிகை..! ரூ .5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை..!!

Senthil Velan
புதன், 12 ஜூன் 2024 (13:44 IST)
உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி மூன்று மணி நேரத்தில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
 
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உளுந்தூர்பேட்டையில் உள்ள வார சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக இருந்தது. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில், தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
 
காலை ஐந்து மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, பெங்களுார் ஐதராபாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தைவிட அதிக விலைகொடுத்து ஆடுகளை வாங்கிக் சென்றனர்.
 
இதில், வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 8000 முதல் 25,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை இந்தச் சந்தையில் 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 3 மணி நேரத்திலேயே ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments