Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை புளுகுக்கு அவ்ளோதான் வேல்யூ! – கே.எஸ்.அழகிரி கிண்டல்!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (12:30 IST)
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியாக செய்யப்படவில்லை என அண்ணாமலை கூறியது குறித்து கே.எஸ்.அழகிரி கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறை இருந்ததாக சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்பு ஏஜென்சிக்கு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்து குறித்து பதிலளித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழக அரசு பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என மத்திய பாதுகாப்பு ஏஜென்சி தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாக அண்ணாமலை பொய்யான தகவலை கூறி வருகிறார்.

அவ்வாறான எந்த கடிதமும் வரவில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மறுத்துள்ளார். மோடி வந்த சென்று 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், திடீர் ஞானோதயத்தால் ஆளுனரை சந்தித்து அண்ணாமலை புகார் அளிக்கிறார். கெட்டிக்காரன் புளுகு 8 நாட்கள் என்பது போல அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை” என பேசியுள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments