Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்து ரத்து: கே.எஸ். அழகிரி கிண்டல்..!

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (15:55 IST)
இல்லாத மழையை காரணம் காட்டி கவர்னர் தேநீர் விருந்தை ரத்து செய்துள்ளார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 
 
சுதந்திர தினத்தின் போது ஆளுநர் தேநீர் விருந்து வைப்பது வழக்கமானது ஒன்று என்றும் இதில் முதலமைச்சர் உள்பட எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவரை அடுத்து காங்கிரஸ் கட்சியும் தனது கட்சி எம்எல்ஏக்கள் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக கவர்னர் மாளிகை அறிவித்திருந்தது. மழை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாகவும் தேநீர் விருந்து நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் தேநீர் தர ஆளுநருக்கு சந்தோஷம் இல்லை என்றும் எங்கள் கூட்டணி சென்று டீ குடித்தால்தான் அவருக்கு சந்தோசம் மரியாதை என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்தார். 
 
இல்லாத மழையை காரணம்  காட்டி தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments