Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானுக்கும் DNA பரிசோதனையா?? எல்லை மீறும் அழகிரியின் பேச்சு!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:03 IST)
கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேசியுள்ளார்.


மெரினா கடலுக்கு நடுவே ரூபாய் 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வடிவத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீட்டர் கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேசியுள்ளார். அவர் கூறியதாவது,

கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை. கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவு சின்னம் வைக்க வேண்டாம் என கூறுபவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருணாநிதியின் பேனா வடிவ நினைவு சின்னத்தை நிறுவ அனுமதிக்க மாட்டோம் என் கூறியிருந்தார் என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments