கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (09:39 IST)
கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் நேற்றும் 4000க்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும், 79 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள் என பல துறையில் இருக்கும் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவன் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் திமுக எம்.எல்.ஏ என்பது குறிப்ப்பிடத்தக்கது
 
கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments