Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவை பிரேமலதா பாதாளத்தில் தள்ளிவிட்டார்: இளவரசி மகள் ஆதங்கம்

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (19:22 IST)
விஜயகாந்த் தனது ரசிகர்களை அரவணைத்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த 14 ஆண்டுகளாக கட்டிக்காத்த தேமுதிக என்ற கட்சியில் ஒரே ஒரு பிரஸ்மீட்டில் அதள பாதாளத்திற்கு தள்ளிய பெருமை அவருடைய மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவையே சேரும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சசிகலாவுடன் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தன்னுடைய சமூக வலைத்தளத்தில், '2006 முதல் தேமுதிக, விஜயகாந்தால் அடைந்த உயரத்தின் அடையாளங்கள் எல்லாம், அழிக்கப்பட்டு, அதல பாதாளம் செல்லக் கூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைக்கு அக்ட்சியை தள்ளியதில் சமபங்கு வகிக்கிறார்கள் பிரேமலதாவும், சுதீசும்' என்று தெரிவித்துள்ளார்.
 
இனி தேமுதிக கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாகவும், வரும் தேர்தலில் அந்த கட்சி கூட்டணியில் போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் 40 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்கும் என்றும் அக்கட்சியின் தொண்டர்களே வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments